குருதத் என்றறியபட்ட வசந்த் குமார் சிவசங்கர் படுகோனே, ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். 1950 மற்றும் 1960 களின் பியாஸா, ககாஸ் கே பூல், சாஹிப் பீபி அவுர் குலாம், சௌத்வின் கா சாண்ட் போன்ற சோகத்தைப் பிழியும் படங்களை உருவாக்கினார். குறிப்பாக, அமெரிக்காவின் டைம் இதழ் "அனைத்து காலத்துக்குமான" 100 சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் பிரபல பிரித்தானிய திரைப்பட இதழான சைட் அண் சவுண்ட் இதழ் 2002 இல் இயக்குநர்கள், விமர்சகர்கள் போன்றோரிடம் நடத்திய வாக்கெடுப்பு போன்றவற்றால், பியாசா மற்றும் காகாஸ் கே பூல் போன்ற திரைப்படங்கள் எல்லா காலத்துக்க்மான திரைபடங்கள் பட்டடியலில் இடம்பெற்றன. எல்லா காலத்திலும் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர்களில் தத் சேர்க்கப்படுகிறார்.